| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3107 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 2 | நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில், மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2 | பல் உலகீர், pal ulageer - பலவகைப்பட்ட உலகர்களே! நீர், neer - நீங்கள் நாடி, naadi - தேடி வணங்கும், vanangum - வணங்கும்படியாகவுள்ள உம்மையும், ummaiyum - உங்களையும் முன் படைத்தான், mun padaithaan - முன்னம் படைத்தவனும் வீடு இல் சீர், veedu il seer - நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான புகழ், pugazh - புகழையுடையனுமான ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில், aadhi piraan avan mevi uraikoyil - ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை, maadam maaligai soozhndhu azhagu aaya thiru kurukoor adhanai - மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை பாடி ஆடி, paadi aadi - பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு பரவி, paravi - துதித்து பரந்து செல்மின்கள், parandhu selminkal - எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள். |