| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3109 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 4 | பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள் ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4 | பேசநின்ற, pesanindra - உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற சிவனுக்கும், sivanukkum - ருத்ரனுக்கும் பிரமன் தனக்கும், Biraman thanakkum - (அவனது தந்தையான) பிரமனுக்கும் பிறர்க்கும், pirarkkum - மற்றுமுள்ள தேவதைகளுக்கும் நாயகன் அவனே, naayagan avane - தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை கபாலம் நல் மோக்கக்து, kabalam nal mokkakthu - கபாலமோக்ஷக்கதையினால் கண்டுகொண்மின், kandu konmin - தெரிந்துகொள்ளுங்கள் தேசம், dhesam - தேஜஸ்ஸுபொருந்திய மா, maa - சிறந்த மதிள் சூழ்ந்து, madhil soozhndhu - மதில்களால் சூழப்பட்டு அழகு ஆய, azhagu aaya - அழகு பெற்றதான திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற ஈசன் பால், eesan paal - ஸர்வேச்வரன் விஷயத்திலே ஓர் அவம் பறைதல், or avam paraidhal - தப்பான பேச்சுக்களைப் பேசுவது இலிங்கியர்க்கு, ilingiyarkku - லிங்கப்பிரமாண வாதிகளுக்கு என் ஆவது, en aavathu - என்னபலனைத்தரும்! |