| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3110 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 5 | இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5 | இலிங்கத்து இட்ட புராணத்தீரும், ilingathu itta puranatheerum - லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும் சமணரும், samanarum - ஜைநர்களாயும் சாக்கியரும், saakiyarum - பௌநர்களாயும் வலிந்து வாது, valindhu vaadhu - விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும் மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான், matrum num dheivamum aaginindraan - தேவதாந்தரங்களாகவும் (இப்படி ஸர்வசரீரகனான) பொலிந்து நின்ற பிரான், polindhu nindra piran - பொலிந்து நின்ற பிரானென்கிற எம்பெருமானை, செந்நெல், sennel - செந்நெற்பயிர்களானவை மலிந்து, malindhu - ஸம்ருத்திபெற்று கவிரி வீசும், kaviri veesum - சாமரை வீசப்பெற்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே கண்டீர், kandeer - ஸேவியுங்கோள் ஒன்றும், ondrum - எள்ளளவும் பொய் இல்லை, poi illai - அஸத்யமில்லை, போற்றுமின், potrumin - துதியுங்கோள் |