Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3111 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3111திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 6
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6
மற்று ஓர் தெய்வம், matru or dheivam - வேறோரு தேவதையை
போற்றி பேண, potri pena - துதிக்கு ஆதரிக்கும்படியாக
புறத்து இட்டு, purathu ittu - வேறுபடுத்தி
உம்மை, ummai - உங்களை
இன்னே, inne - இப்போதுநீங்களிருக்கிற விதமாக
தேற்றி வைத்தது, thettri vaithadhu - தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது
எல்லீரும், elleerum - எல்லாரும் (எதற்காகவென்றால்)
வீடு பெற்றால், veedu petraal - முக்தியுடைந்தால்
உலகு இல்லை என்றே, ulagu illai endrae - புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்;
சேற்றில், setril - சேற்றுநிலத்தில்
செந்நெல், sennel - செந்நெற்பயிர்களும்
கமலம், kamalam - தாமரையும்
ஓங்கி, oongi - ஓங்கி வளரப்பெற்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆற்றல் வல்லவன், aatral vallavan - பரமசக்தியுக்தனான பெருமானுடைய
மாயம் கண்டீர், maayam kandeer - மாயையேயாமத்தனை;
அது, Adhu - மாயையென்பதை
அறிந்து, arindhu - தெரிந்துகொண்டு
அறிந்து, arindhu - அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு
ஓடுமின, oodumin - திருவடியே சென்று சேரப் பாருங்கள்.