| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3111 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 6 | போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே; சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள் ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6 | மற்று ஓர் தெய்வம், matru or dheivam - வேறோரு தேவதையை போற்றி பேண, potri pena - துதிக்கு ஆதரிக்கும்படியாக புறத்து இட்டு, purathu ittu - வேறுபடுத்தி உம்மை, ummai - உங்களை இன்னே, inne - இப்போதுநீங்களிருக்கிற விதமாக தேற்றி வைத்தது, thettri vaithadhu - தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது எல்லீரும், elleerum - எல்லாரும் (எதற்காகவென்றால்) வீடு பெற்றால், veedu petraal - முக்தியுடைந்தால் உலகு இல்லை என்றே, ulagu illai endrae - புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்; சேற்றில், setril - சேற்றுநிலத்தில் செந்நெல், sennel - செந்நெற்பயிர்களும் கமலம், kamalam - தாமரையும் ஓங்கி, oongi - ஓங்கி வளரப்பெற்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற ஆற்றல் வல்லவன், aatral vallavan - பரமசக்தியுக்தனான பெருமானுடைய மாயம் கண்டீர், maayam kandeer - மாயையேயாமத்தனை; அது, Adhu - மாயையென்பதை அறிந்து, arindhu - தெரிந்துகொண்டு அறிந்து, arindhu - அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு ஓடுமின, oodumin - திருவடியே சென்று சேரப் பாருங்கள். |