| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3112 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 7 | ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்; கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள் ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7 | ஓடி ஓடி, oodi oodi - ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி பலபிறப்பும் பிறந்து, palapirappum pirandhu - பலபல யோனிகளிலே பிறந்து பல் படி கால், pal padi kaal - வம்ச பரம்பரையாக மற்று ஓர் தெய்வம் வழி ஏறி, mattru or dheivam vazhi eri - தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி பாடி ஆடி பணிந்து, paadi aadi panindhu - பலபடியாக வழிபட்டு கண்டீர், kandeer - பலன் கைபுகுந்தமை கண்டீர்களே; வானவர், vaanavar - தேவர்கள் கூடி, koodi - திரண்டு ஏத்த நின்ற, eatha nindra - துதிக்கும்படி நின்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற ஆடு புள்கொடி ஆதி மூர்த்திக்கு, aadu pulkodi aadhi moorthikku - ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு அடிமை புகுவது, adimai puguvadhu - அடியராயிருந்த தகுதி |