| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3113 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 8 | புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே; கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8 | அடிமையினால், adimaiyinaal - அடிமைசெய்து புக்கு, pukku - உள்புகுந்து தன்னை கண்ட, thannai kanda - தன்னைக்காணப்பெற்ற மார்க்கண்டேயனவனை, markkandeyanavannai - மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை அன்று, andru - அக்காலத்தில் நக்கபிரான், nakkapiraan - திகம்பரச்சாமியான ருத்ரன் உய்யக்கொண்டதும், uyyakkondadhum - ரகூஷித்ததும் நாராயணன் அருளே, naarayanan arule - நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற தட தாழை, thada thaazhai - பெரியதாழைகளை வேலி, veli - வேலியாகவுடைய திருகுருகூர் அதனுள், thirukurukoor adhanul - திருநகரியிலே மிக்க, mikka - மேம்பாடுடைய ஆதி பிரான் நிற்க, aadhi piraan nirka - ஆதிநாதப்பெருமாளிருக்க மற்ற எ தெய்வம், matra e dheivam - வேறு எந்த தேவதைகளை விளம்புதிர், vilambuthir - பேசுகிறீர்கள்? |