Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3113 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3113திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 8
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8
அடிமையினால், adimaiyinaal - அடிமைசெய்து
புக்கு, pukku - உள்புகுந்து
தன்னை கண்ட, thannai kanda - தன்னைக்காணப்பெற்ற
மார்க்கண்டேயனவனை, markkandeyanavannai - மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை
அன்று, andru - அக்காலத்தில்
நக்கபிரான், nakkapiraan - திகம்பரச்சாமியான ருத்ரன்
உய்யக்கொண்டதும், uyyakkondadhum - ரகூஷித்ததும்
நாராயணன் அருளே, naarayanan arule - நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற
தட தாழை, thada thaazhai - பெரியதாழைகளை
வேலி, veli - வேலியாகவுடைய
திருகுருகூர் அதனுள், thirukurukoor adhanul - திருநகரியிலே
மிக்க, mikka - மேம்பாடுடைய
ஆதி பிரான் நிற்க, aadhi piraan nirka - ஆதிநாதப்பெருமாளிருக்க
மற்ற எ தெய்வம், matra e dheivam - வேறு எந்த தேவதைகளை
விளம்புதிர், vilambuthir - பேசுகிறீர்கள்?