| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3114 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 9 | விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9 | விளம்பும், vilambum - கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான ஆறு சமயமும், aaru samayamum - ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும் அவை ஆகிய, avai aagiya - அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான மற்றும், matrum - குத்ருஷ்டி மதங்களும் தன் பால், than paal - தன் விஷயத்திலே அளந்து காண்டற்கு அரியன் ஆகிய, alandhu kaandaṟku ariyan aagiya - எல்லை காணவொண்ணாதனாயிருக்கிற ஆதி பிரான், aadhi piraan - ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன் அழகும், azhagum - நித்யவாஸம் பண்ணுமிடமாய் வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய, valam kol than panai soozhnthu azhagu aaya - வளம் மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான திருகுருகூர் அதனை, thirukurukoor adhanai - திருநகரியை உம்மை, ummai - உங்களை உய்யக் கொண்டு போகுறில், uyya kondu pokuril - உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்க வேண்டியிருந்தீர்களாகில் உளம் கொள் ஞானத்து, uḷam kol nyaanathu - அந்தரங்க ஞானத்துக்குள்ளே வைம்மின், vaimmin - வைத்துச் சிந்தனை செய்யுங்கள். |