| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3115 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 10 | உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள் குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10 | எத்தேவும், Ethevum - எல்லாத் தேவதைகளும் எ உலகங்களும், E ulagangalum - எல்லாவுலகங்களும் மற்றும், Matrum - மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய இத்தனையும், Ithanaiyum - இவையடங்கலும் தன் பால், Than paal - தன்னுடையதான மறு இல் மூர்த்தியோடு ஒத்து, maru il Moorthiyodu othu - நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி) நின்ற வண்ணம் நிற்க, Nindra vannam nirka - குறையற நிற்குமிருப்பிலே செறுவில், Seruvil - விளை நிலங்களில் செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களும் கரும்பொடு, Karumpodu - கருப்பஞ்சோலைகளும் ஓங்கு, Oongu - வளரும்படியான திருகுருகூர் அதனுள், Thirukurukoor adhanul - திருநகரியிலே குறிய மாண் உரு ஆகிய, Kuriya maan uru aagiya - வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும் நீள் குடக் கூத்தனுக்கு, Neel kuda koothanukku - (க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு ஆள் செய்வதே உறுவதாவது, Aal seivadhe uruvathavadhu - அடிமை செய்வதே உற்றதாம் |