திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3115 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3115திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 10
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள் குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10
பதவுரை Show / Hide
எத்தேவும், Ethevum - எல்லாத் தேவதைகளும்
எ உலகங்களும், E ulagangalum - எல்லாவுலகங்களும்
மற்றும், Matrum - மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய
இத்தனையும், Ithanaiyum - இவையடங்கலும்
தன் பால், Than paal - தன்னுடையதான
மறு இல் மூர்த்தியோடு ஒத்து, maru il Moorthiyodu othu - நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி)
நின்ற வண்ணம் நிற்க, Nindra vannam nirka - குறையற நிற்குமிருப்பிலே
செறுவில், Seruvil - விளை நிலங்களில்
செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களும்
கரும்பொடு, Karumpodu - கருப்பஞ்சோலைகளும்
ஓங்கு, Oongu - வளரும்படியான
திருகுருகூர் அதனுள், Thirukurukoor adhanul - திருநகரியிலே
குறிய மாண் உரு ஆகிய, Kuriya maan uru aagiya - வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும்
நீள் குடக் கூத்தனுக்கு, Neel kuda koothanukku - (க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு
ஆள் செய்வதே உறுவதாவது, Aal seivadhe uruvathavadhu - அடிமை செய்வதே உற்றதாம்