| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3116 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 11 | ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான், நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11 | ஆள் செய்து, Aal seidhu - (உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி ஆழி பிரானை சேர்ந்தவன், Aazhi piraanai serndhavan - ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும் வண் குருகூர் நகரான், Van Kurukoor nagaraan - திருநகரிக்குத் தலைவரும் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன், Naal kamazh magizh maalai maarbinan - பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான மாறன் சடகோபன், Maaran Sadagopan - ஆழ்வார் வேட்கையால், Vetkaiyaal - ஆதரத்தோடு சொன்ன பாடல் ஆயிரத்துள், Sonna paadal aayirathul - ஆயிரம்பாட்டினுள்ளே இ பத்தும், I pathum - இப்பதிகத்தை வல்லார், Vallar - ஓதவல்லவர்களுக்கு மீட்சி இன்றி, Meetchi indri - மீண்டும் திரும்பிதலில்லாத வைகுந்தம் மாநகர் மற்றது, Vaigundham maanagar mattrathu - ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம் கையது, Kaiyadhu - கரஸ்தம். |