| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3117 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (நான் இதரவிஷயங்களிலே மிகவும் ஈடுபட்டவனாயிருந்து வைத்து, பகவத்விஷயத்திலீடுபட்டவன் போல நடித்துச் சில க்ருத்ரிமச் சொற்களைச் சொல்ல, அவ்வளவிலே எம்பெருமான் என்னை விஷயீகரித்தருளினானென்கிறார்.) 1 | கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1 | கைஆர் சக்கரத்து,Kaiar chakkarattu - திருக்கையில் பொருந்திய திருவாழியாழ் வானையுடையவனும் என் கரு மாணிக்கமே,En karu maanikame - எனக்கு விதேயமான கருமாணிக்கம் போன்றவனுமான பெருமானே! என்று என்று,Enru enru - என்று பலகாலும் பொய்யே கைம்மை சொல்லி,Poyye kaimmai solli - பொய்யாகவே கபடவார்த்தையைச் சொல்லி (அந்த வார்த்தைக்குத் தகுதியில்லாதபடி) புறமே புறமே ஆடி,Purame purame aadi - விஷயாந்தரங்களிலேயே அவகாஹிந்திருந்தும் மெய்யே பெற்றறோழிந்தேன்,Meyye petraroazhinden - மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்; விதி வாய்க்கின்று,Vidhi vaaykinru - பகத்திருபை பலிக்குமிடத்தில் காப்பர் ஆர்,Kaappar aar - அதைத் தடுக்கவல்லார் யார்? கண்ணபிரான்,Kannapiraan - ஸ்ரீக்ருஷ்ணனே! இனி,Ini - உன்கிருபை எனக்குப் பலிக்கப் பெற்றபின்பு போனால்,Ponaal - என்னைவிட்டு நீ போக விரும்பினாயாகில் அறையோ,Arayyo - தாராளமாகப்போகலாம்; (தடுப்பேனல்லேன்.) ஐயோ,Aiyyo - சந்தோஷக்குறிப்பு (இனி உன்னால் பெயர்ந்துபோக முடியாதென்றபடி.) |