Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3121 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3121திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) ((கண்ண பிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில்.) 5
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5
கண்ணபிரானை,Kannapiraanai - ஸ்ரீகிருஷ்ணனான் அவதரித்து மஹோபகாரங்கள் செய்தவனும்
விண்ணோர் கருமாணிக்கத்தை,Vinnor Karumanikkathai - நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷண விக்ரஹத்தையுடையவனும்
அமுதை,Amudhai - அமிருதம்போன்றவனுமான உன்னை
எண்ணியும்,Enniyum - கிட்டியிருக்க செய்தேயும்
நன்னகில்லேன்,Nannagilleen - கிட்டப்பெறாதார் கணக்கிலேயிராநின்றேன்; (அதற்குக் காரணமேதென்னில்)
நடுவே,Naduvé - இடைச்சுவராக
ஓர் உடம்பில் இட்டு,Or Udambil Ittu - ஒரு சரீரத்திலே சேர்ப்பித்து
பல செய்வினைகள் கயிற்றால்,Pala Seivinaigal Kayirtraal - பலவகைப்பட்ட கருமங்களாகிய வலிய பாசங்களாலே
திண்ணம் விழுந்த கட்டி,Thinnam Vizhuntha Katti - மிகவும் திடமாகக்கட்டி
புண்ணை,Punnai - ஹேயதோஷங்களை
மறைய வரிந்து,Maraiya Varinthu - தெரியாதபடியாகப் பண்ணி
என்னை,Ennai - அசந்தனான என்னை
பதமே,Pathame - உனக்குப் புறம்பான விஷயங்களிலே
போர வைத்தாய்,Pora Vaithai - தள்ளிவைத்தாய்.