திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3124 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3124திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தனக்கு விலக்ஷண போக்தாக்கள் உண்டாய் இருக்கச் செய்தே என்னுள்ளே இப்போது புகுந்தான் -எனக்கு இனி சர்வவித போகமும் எம்பெருமானே என்கிறார்.) 8
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம் மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8
பதவுரை Show / Hide
மேல் ஆம் தேவர்களும்,Mael Aam Thevarkalum - மிகச்சிறந்தவர்களான நித்யஸூரிகளும்
நிலத் தேவர்களும்,Nilath Thevarkalum - இவ்வுலகத்திலுள்ள பக்தர்களும்
மேவி தொழும்,Mevi Thozhum - விரும்பி வணங்கிநின்ற
மானார்,Maanaar - எம்பெருமான்
நினநாள்,Ninanaal - இப்போதும்
வந்து,Vandhu - என்பக்கலிலே ஆமிழுக்கியம் பணிவந்து
அடியேன் மனத்தே,Adiyen Manathae - எனது நெஞ்சினுள்ளே
மன்னினார்,Manninaar - பெருந்தினார்;
இனி,Ini - இது முதலாக
சேல் எய் கண்ணியரும்,Sael Ey Kanniyarum - மீனோக்குடைய மாதர்களும்
பெரு செல்வமும்,Peru Selvamum - மஹத்தான ஜச்சரியமும்
நல் மக்களும்,Nal Makkalum - குணம்மிக்க பிள்ளைகளும்
மேல் ஆம் தாய் தந்தையும்,Mael Aam Thaai Thanthaiyum - மேம்பட்ட மாதாபிதாக்களும்
அவரே ஆவார்,Avarae Aavaar - (எனக்கு) அப்பெருமானேயாவர்.