Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3125 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3125திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இந்த ஸம்ஸார மண்டலத்திலே இதுகாறும் நான் பட்ட கிலேசங்களெல்லாம் தீர எம்பெருமான் தன்னுடைய பொருளாலே அபாராக்ருதமான வடிவோடே வந்து என்னோடே கலந்தானென்கிறார்.) 9
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9
துணை ஆவார் ஆர் என்று,Thunai Aavaar Aar Endru - காப்பாரொருவருமில்லையேயென்று கதறிக் கொண்டு
அலை நீர் கடலுள் அழுந்தும்,Alai Neer Kadalul Azhundhum - அலையெறிகின்ற கடலினுள்ளே அமிழ்ந்துகிற
நாவாய் போல்,Naavaai Pol - படகுபொலே
நான்,Naan - அடியேன்
பிறவி கடலுள்,Piravi Kadalul - ஸம்ஸாரக்கடலினுள்ளே
நின்று துளங்க,Nindru Thulanga - நின்று சிரமப்படா நிற்கையில்
தேவு ஆர் கோலத்தோடும்,Thevu Aar Kola Thoodum - (எம்பெருமான்) திவ்யமான வடிவோடும்
திருசக்கரம் சங்கினோடும்,Thiruchakaram Sanginodum - திருவாழி திருசங்குகளோடும்கூடி
ஆ ஆ என்று,Aa Aa Endru - ஐயோ ஐயோ வென்று
அருள் செய்து,Arul Seydhu - க்ருபைபண்ணி
அடியேனோடும் ஆனான்,Adiyenoatum Aanaan - என்னோடும் கூடினான்