| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3125 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இந்த ஸம்ஸார மண்டலத்திலே இதுகாறும் நான் பட்ட கிலேசங்களெல்லாம் தீர எம்பெருமான் தன்னுடைய பொருளாலே அபாராக்ருதமான வடிவோடே வந்து என்னோடே கலந்தானென்கிறார்.) 9 | ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத் தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும் ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9 | துணை ஆவார் ஆர் என்று,Thunai Aavaar Aar Endru - காப்பாரொருவருமில்லையேயென்று கதறிக் கொண்டு அலை நீர் கடலுள் அழுந்தும்,Alai Neer Kadalul Azhundhum - அலையெறிகின்ற கடலினுள்ளே அமிழ்ந்துகிற நாவாய் போல்,Naavaai Pol - படகுபொலே நான்,Naan - அடியேன் பிறவி கடலுள்,Piravi Kadalul - ஸம்ஸாரக்கடலினுள்ளே நின்று துளங்க,Nindru Thulanga - நின்று சிரமப்படா நிற்கையில் தேவு ஆர் கோலத்தோடும்,Thevu Aar Kola Thoodum - (எம்பெருமான்) திவ்யமான வடிவோடும் திருசக்கரம் சங்கினோடும்,Thiruchakaram Sanginodum - திருவாழி திருசங்குகளோடும்கூடி ஆ ஆ என்று,Aa Aa Endru - ஐயோ ஐயோ வென்று அருள் செய்து,Arul Seydhu - க்ருபைபண்ணி அடியேனோடும் ஆனான்,Adiyenoatum Aanaan - என்னோடும் கூடினான் |