| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3126 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத் திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார்.) 10 | ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க் கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10 | மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய்,Meen Aay Aamaiyam Aanar Singamum Aay Kurai Aay - மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும் கான் ஆர் எனமும் ஆய் இன்னம்,Kaan Aar Enamum Aay Innam - வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி கற்கி ஆம்,Karki Aam - கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும் கார்வண்ணன்,Kaarvannan - காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான் ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு,Aal Udaiaan Aanaan Endra Ahadeh Kondum - என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு உகந்து வந்து,Ugandhu Vandhu - உகப்போடோளந்து தானே இன் அருள் செய்து,Thaane Inn Arul Seydhu - தானாகவே இனிய கிருபையைப் பண்ணி என்னை முற்றவும் தான் ஆனான்,Ennai Muttavum Thaan Aanaan - எனக்கு ஸகல போக்யவஸ்துக்களும் தானேயானான். |