Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3127 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3127திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீ மிக்கவர்களாய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11
கார் வண்ணன்,Kaar Vannan - மேகவண்ணனும்
கண்ணபிரான்,Kannapiraan - ஸர்வஸுலபனும்
கமலம் தட கண்ணன் தன்னை,Kamalam Tada Kannan Thannai - தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களையுடையனுமான எம் பெருமானைக் குறித்து.
ஏர் வளம் ஒண் கழனி,Aer Valam On Kalani - எங்களின் மிகுதியையுடைத்தாய் அழகியவான கழனிகளையுடைய
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொன்ன,Sonna - அருளிச்செய்த
சீர் வண்ணம் ஒண் தமிழர்கள்,Seer Vannam On Tamilarkal - சீரும் வண்ணமும் குறையாத தமிழினாலான
இவை ஆயிரத்துள் இ பத்தும்-;,Ivai Aayiraththul I Patthum-; - இவை ஆயிரத்துள் இ பத்தும்-;
ஆர் வண்ணத்தால்,Aar Vannathaal - அமிருதபானம் பண்றுமாபோலே
உரைப்பர்,Uraippar - ஓதுமவர்கள்
பொலிந்து,Polindhu - ஸம்ருத்தியோடே யிருந்து
அடிகீழ்,Adikeezh - அவ்வெம்பெருமான் திருவடிகளின் கீழே
புகுலார்,Pugulaar - புகப்பெறுவர்கள்.