| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3128 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேனுமென்று காப்பிடுகிறார்.) 1 | பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1 | பொலிக பொலிக பொலிக,Poliga Poliga Poliga - வாழ்க! வாழ்க! வாழ்க! உயிர்,Uyir - ஜீவராசிகளுக்குண்டான வல்,Val - வலிதான நைந்த,Naindha - அழிந்துபோன இங்கு,Ingu - இவ்விபூதியில் நமனுக்கு,Namanukku - யமனுக்கு யாது ஒன்றும் இல்லை,Yaathu Ondrum Illai - ஒரு காரியமுமில்லை. கலியும்,Kaliyum - கலிபுருஷனும் நெடும்,Netum - (விரைவில்) தொலையக்கூடும். கண்டு கொள்மின்,Kandu Kolmin - (அதை) ப்ரத்யக்ஷமாகக் காண்பீர்கள்; பூதங்கள்,Poothangal - பக்தர்கள் சாபம்,Sabam - பாவமானது போயிற்று,Poyitru - தொலைந்தது; நலியும்,Naliyum - வருத்தத்தை விளைவிக்கக்கூடிய நரகமம்,Naragamum - நகரலோகங்களும் கடல் வண்ணன்,Kadal Vannan - கடல்போன்ற நிறத்தையுடையவனான பகவானுடைய பூதங்கள்,Poothangal - பக்தர்கள் மண் மேல்,Mann Mel - இந்நிலத்தில் மலிய புகுந்து,Maliya Pugundhu - நிரம்பி இசை பாடி,Isai Paadi - இனிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு ஆடி உழிதர கண்டோம்,Aadi Uzhidhara Kandom - இங்குமங்கும் நடமாடக் காண்கிறோம் |