Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3128 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3128திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேனுமென்று காப்பிடுகிறார்.) 1
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1
பொலிக பொலிக பொலிக,Poliga Poliga Poliga - வாழ்க! வாழ்க! வாழ்க!
உயிர்,Uyir - ஜீவராசிகளுக்குண்டான
வல்,Val - வலிதான
நைந்த,Naindha - அழிந்துபோன
இங்கு,Ingu - இவ்விபூதியில்
நமனுக்கு,Namanukku - யமனுக்கு
யாது ஒன்றும் இல்லை,Yaathu Ondrum Illai - ஒரு காரியமுமில்லை.
கலியும்,Kaliyum - கலிபுருஷனும்
நெடும்,Netum - (விரைவில்) தொலையக்கூடும்.
கண்டு கொள்மின்,Kandu Kolmin - (அதை) ப்ரத்யக்ஷமாகக் காண்பீர்கள்;
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
சாபம்,Sabam - பாவமானது
போயிற்று,Poyitru - தொலைந்தது;
நலியும்,Naliyum - வருத்தத்தை விளைவிக்கக்கூடிய
நரகமம்,Naragamum - நகரலோகங்களும்
கடல் வண்ணன்,Kadal Vannan - கடல்போன்ற நிறத்தையுடையவனான பகவானுடைய
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இந்நிலத்தில்
மலிய புகுந்து,Maliya Pugundhu - நிரம்பி
இசை பாடி,Isai Paadi - இனிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு
ஆடி உழிதர கண்டோம்,Aadi Uzhidhara Kandom - இங்குமங்கும் நடமாடக் காண்கிறோம்