| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3129 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை யனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார்.) 2 | கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2 | வண்டு ஆர்,Vandu Ar - (மது பானத்திற்காக) வண்டுகள் பொருந்திய தண் அம் துழாயான்,Than Am Thuzhaayan - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான மாதவன்,Madhavan - திருமாலினது பூதங்கள்,Poothangal - பக்தர்கள் மண் மேல்,Mann Mel - இந்நிலத்திலே பண்,Pan - இராசங்களை பாடி நின்ற ஆடி,Paadi Nindra Aadi - பாடிக்கொண்டு ஆடிக் கொண்டு பரந்து,Parandhu - எங்கும் பரவி திரிகின்றன,Thirigindran - எங்கும் பரவி உலாவுகின்றனர்; கண்ணுக்கு இனியன,Kannukku Iniyan - (இப்படி) கண்ணுக்குப் பரமபோக்கயமான நிலைமைகளை கண்டோம் கண்டோம் கண்டோம் ,Kandom Kandom Kandom - கண்டோம்-; தொண்டீர் எல்லீரும்,Thondir Ellirum - பாகவதர்களான ஸகல பேர்களும் வாரீர்,Vaareer - வாருங்கள்; தொழுது தொழுது நின்று,Thozhudhu Thozhudhu Nindru - நன்றாகவணங்கி ஆர்த்தும்,Aarthum - ஆரவாரிப்போம். |