| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3130 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ((திரியும் கலியுகம்) நித்ய ஸூரிகளும் இந்நிலத்திலே அடியிட்டு வந்து சேர்ந்து ஒன்று கூடிப் பரிமாறலாம்படி ஸம்ஸார மண்டலம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ மயமாயிற்றென்கிறார்.) 3 | திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக் கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3 | திரியும்,Thiriyum - தருமங்கள் தலைகீழாக ஆகும்படியான கலியுகம்,Kaliyugam - கலியுகமானது நீங்கி,Neengi - தொலையப்பெற்று பெரிய,Periya - தருமந் சிறந்த கிதயுகம்,Kidayugam - கிருதயுகமானது பற்றி,Pattiri - வந்து புகுந்து தேவர்கள் தாமும் புகுந்து,Devargal Thamum Pugundhu - தேவப் பிரகிருதிகளும் தாமாகவே நெருங்கி பேர் இன்பம் வெள்ளம் பெருக,Per Inbam Vellam Perukka - மஹத்தான ஆனந்த வெள்ளம் பெருகும்படியாக கரிய முகில் வண்ணன்,Kariya Mugil Vannan - காளமேகவண்ணனாயும் கடல் வண்ணன்,Kadal Vannan - கடல்வண்ணனாயுமுள்ள எம்மான்,Emman - எம்பெருமானுடைய பூதங்கள்,Poothangal - பக்தர்கள் மண் மேல்,Mann Mel - இவ்விபூதியிலே இரிய புகுந்து,Iriya Pugundhu - மிக்க கோலாஹலங்களுடன் வந்து இசை பாடி,Isai Paadi - கீதங்களைப் பாடிக் கொண்டு எக்கும்,Eggum - எல்லாவிடங்களிலும் இடம் கொண்டன,Idam Kondan - வியாபித்துவிட்டார்கள். |