| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3131 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அயர்வறும் அமரர்களும் புகுந்து பரிமாறலாம் படி சம்சாரம் அடைய வைஷ்ணவர்கள் யாயிற்று -என்கிறார்.) 4 | இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4 | இடம் கொள்,Idam Kol - எங்கும் நிறைந்த சமயத்தை எல்லாம்,Samayathai Yellam - துஷ்டமதங்களையெல்லாம் எடுத்து களைவன போலே,Eduthu Kalaiyavan Pole - வேர்பறியகாகப் பறித்துத் தொலைப்பாரைப் போலே தட கடல் பள்ளி பெருமான் தன்னுடைய பூதங்களே ஆய்,Thata Kadal Palli Peruman Thannudaiya Poothangaley Aay - ஸமுத்ரசாயியான பகவானுடைய பக்தரல்களே மலிந்து கிடந்தும்,Kidandhum - படுத்துக்கொண்டும் இருந்தும்,Irundhum - உட்கார்ந்துகொண்டும் எழுந்தும்,Ezundhum - நின்று கொண்டும் பல பல கீதம் பாடி நடந்தும்,Pala Pala Geetham Paadi Nadandhum - பலபல பாட்டுக்களைப் பாடிக்கொண்டே நடந்துகொண்டும் பறந்தும்,Parandhum - தரையில் கால் பாவாதபடி குனித்தும்,Kunithum - கூத்தாடிக்கொண்டு நாடகம் செய்கின்றன,Nadagam Seyginran - களித்துத் திரியா நின்றார்கள். |