Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3131 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3131திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அயர்வறும் அமரர்களும் புகுந்து பரிமாறலாம் படி சம்சாரம் அடைய வைஷ்ணவர்கள் யாயிற்று -என்கிறார்.) 4
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4
இடம் கொள்,Idam Kol - எங்கும் நிறைந்த
சமயத்தை எல்லாம்,Samayathai Yellam - துஷ்டமதங்களையெல்லாம்
எடுத்து களைவன போலே,Eduthu Kalaiyavan Pole - வேர்பறியகாகப் பறித்துத் தொலைப்பாரைப் போலே
தட கடல் பள்ளி பெருமான் தன்னுடைய பூதங்களே ஆய்,Thata Kadal Palli Peruman Thannudaiya Poothangaley Aay - ஸமுத்ரசாயியான பகவானுடைய பக்தரல்களே மலிந்து
கிடந்தும்,Kidandhum - படுத்துக்கொண்டும்
இருந்தும்,Irundhum - உட்கார்ந்துகொண்டும்
எழுந்தும்,Ezundhum - நின்று கொண்டும்
பல பல கீதம் பாடி நடந்தும்,Pala Pala Geetham Paadi Nadandhum - பலபல பாட்டுக்களைப் பாடிக்கொண்டே நடந்துகொண்டும்
பறந்தும்,Parandhum - தரையில் கால் பாவாதபடி
குனித்தும்,Kunithum - கூத்தாடிக்கொண்டு
நாடகம் செய்கின்றன,Nadagam Seyginran - களித்துத் திரியா நின்றார்கள்.