திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3132 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இவ்வுலகத்தில் பலபல காரியங்கள் நடைபெற்றுவந்தாலும் அவையொன்றும் ஆழ்வாருடைய திருக்கண்ணில் படாமே ஒரே ஒரு விஷயந்தான் தமது திருக்கண்களுக்குப் புலப்டுகின்றதாக இதில் அருளிச் செய்கிறார். எங்கு பார்த்தாலும் பாகவத கோஷ்டி யொன்றே ஸேவை ஸாதிக்கின்றதாம் தமக்கு.) 5 | செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5 | பதவுரை Show / Hideசெய்கின்றது,Seyginradhu - இவர்கள் செய்கிற காரியம் என் கண்ணுக்கு,Enn Kannuku - நான் பார்க்குமிடத்து ஒன்றே ஒக்கின்றது,Ondre Okkinradhu - ஒன்றுபோலவே யிரா நின்றது; இ உலகத்து,E Ulakathu - இவ்விபூதியிலே வைகுந்தன் பூதங்களே,Vaikunthan Poothangaley - பகவத்பக்தர்களே மயாத்தினால்,Mayathinal - யதேஷ்டமாக எங்கும் மன்னி,Engum Manni - எல்லாவிடங்களிலும் நிறைந்து ஆய்,Aay - இருக்கின்றார்கள் அரக்கர்,Arakkar - ராக்ஷசர்களாவும் அசுரர்,Asurar - அசுரர்களாகவும் பிறந்தீர் உள்ளீர் ஏல்,Pirandheer Ullir El - பிறந்தவர்களாயிருப்பீர்களாகில் தொண்டீர்,Tondheer - இதரவிஷயங்களிலலே சபவர்களாயிருப்பவர்களே! கொன்று,Konru - உங்களைக் கொலைசெய்து ஊழி பெயர்த்திடும்,Uuzhi Peyarthidum - யுகத்தையே மாற்றிவிடுவீர்கள்; (கலியுகத்ததைக் கிருதயகமாகவே ஆக்கிவீடவார்கள்) உய்யும் வகை இல்லை,Uyyum Vagai Illai - (ஆதலால் உங்களுக்கு) பிழைக்கும் வழிஇல்லை; ஐயம் ஒள்று இல்லை,Aiyam Olru Illai - (இதில்) சிறிதும் ஸந்தேஹமில்லை. |