Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3133 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3133திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய ஸகல க்லேசங்களும் தீரும்படி பாகவதர்கள் ஜகத் எங்கும் பரந்தார்கள், அவர்களை ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்! என்று, கீழ்ச் சொன்னவர்களை நோக்கி யருளிச் செய்கிறார்.) 6
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6
கொன்று,Konru - கொலைசெய்து
உயிர் உண்ணும்,Uyir Unnum - பிராணனைமுடிக்குமதான
விசாதி,Visaathi - வியாதியும்
பகை,Pagai - துவேஷமும்
பசி,Pasi - பசியும் (முதலான)
தீயன எல்லாம்,Theeyan Ellam - மற்றுமுள்ள கொடியவை எல்லாவற்றையும்
இ உலகில் நின்று கடிவான்,E Ulagil Nindru Kadivan - இவ்விபூதியலே தொலைப்பதற்காக
நேமி பிரான் தமர்,Nemi Piran Thamar - சக்ரபாணியான எம்பெருமானது பக்தர்கள்
போந்தார்,Pondhaar - வந்துள்ளார்கள்;
இசை,Isai - இசைகளை
நன்று பாடியும்,Nandru Paadiyum - நன்றாகப்பாடியும்
துள்ளி ஆடியும்,Thulli Aadiyum - துள்ளிக்குதித்தும்
ஞாலம்,Gnalam - இந்நிலத்திலே
தொண்டீர்,Tondheer - இதரவிஷயங்களில் சபலராயிருக்கிறவர்களே!
சிந்தையை,Sindhaiyai - உங்களது நெஞ்சை
செம் நிறத்தி,Sem Niratti - செவ்வையாக (நல் விஷயத்திலே) ஸ்தாபித்து
சென்று,Sendru - அப்படிப்பட்டட பக்தர்களிடத்தே போய்
தொழுது,Thozhudhu - வணங்கி
உய்ம்மின்,Uymin - உஜ்ஜீவியுங்கோள்.