Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3134 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3134திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (எங்கும் பரம பாகவதர்களே மலிந்து விட்டார்களென்று பரம ஸந்தோஷம் பூரித்து நின்ற ஆழ்வார் காலதோஷத்தாலே சில அவைஷ்ணவர்களையும் கண்டார்; அவர்கள் பகவத் பாகவத ப்ரவணர்களாயன்றிக்கே தேவதாந்தர ஸமாரராதன பரர்களாய் இருக்கிறபடியையுங் கண்டார்; அன்னவர்களையும் உபதேசத்தாலே திருத்தப் பார்த்து இப்பாசுரமருளிச் செய்கிறார்.) 7
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7
நும் உள்ளத்து,Num Ullathu - உங்கள் நெஞ்சுக்குள்ளே
நிறுத்தி,Niruthi - வலியப்பிடித்து உட்காரவைத்து
கொள்ளும்,Kollum - சிந்திக்கப்படுகின்ற
தெய்வங்கள்,Dheyvangal - தேவதைகள்
உய்யக்கோள்,Uyyakkol - உஜ்ஜீப்பித்துக்கொள்வதும்
அவனோடே,Avanode - அந்த எம்பெருமான் தன்னோடே
மறுத்தும் கண் கூர்,Maruthum Kann Koor - மீண்டு சென்று கிட்டிக்கிடீர்;
மார்க்கண்டேயனும்,Maarkandeyanum - (இவ்விஷயத்தில்) மார்க்கண்டேயனும்
கரி,Kari - ஸாக்ஷியாவன்;
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா,Karutha Manam Ondrum Vaenda - (உங்களுக்கு) மலினமான நெஞ்சு சிறிதும் வேண்டியதில்லை;
கண்ணன் அல்லால்,Kannan Allal - ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த ஸ்ரீமந் நாராயணனல்லது
தெய்வம் இல்லை,Dheyvam Illai - பரதெய்வம் வேறுகிடையாது;
இறுப்பது எல்லாம்,Iruppadhu Ellam - (ஆன பின்பு) நீங்கள் செலுத்தும் கடமைகளையெல்லாம்
அவன் மூர்த்தியாயவர்க்கே இறுமின்,Avan Murthiyavarkke Irumin - அப்பெருமானுடைய சரீரபூதர்களுக்குச் செலுத்துகின்றோமென்கிற பிரதிபத்தியுடனே செலுத்துங்கள்.