Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3135 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3135திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தேவதாந்த்ரங்களை ஆஸ்ரயித்து அபேக்ஷிதங்களை பெற்றார் இல்லையோ என்னில்- அந்த தேவதைகள் ஆஸ்ரித அபேக்ஷிதங்கள் கொடுக்க வல்லவாம் படி பண்ணினான் எம்பெருமானே - அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.) 8
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8
இறுக்கும் இறை,Irukkum Ir - அவரவர்கள் செலுத்த வேண்டிய கடன்களை
இறந்து,Iranthu - செலுத்தி
உண்ண,Unna - அவரவர்கள் வாழும்படி
எவ்வுலகுக்கும்,Evvulagum - வேறுவேறு வகைப்பட்டருசியையுடைய ஸமஸ்தலோகத்துக்கும்
தன் மூர்த்தி,Than Murthi - தன்னுடைய சரீரங்களை
தெய்வங்கள் ஆக,Dheyvangal Aaga - அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கைக்கு உரிய தேவதைகளாக
நிறுத்தினான்,Niruthinaan - ஏற்பாடு பண்ணினவன்
அத்தெய்வநாயகன் தானே,Attheyvanaayan Kan Thaane - ஸர்வதேவதாநாயநனான அப்பெருமானே யவன் (ஆகையால்)
மறு திரு மார்வன அவன் தன் பூதங்கள்,Maru Thiru Maarvanavan Than Pudhangal - ஸ்ரீவத்ஸமென்னும் மறுவைத் திருமலிலே உடையனான அப்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்கள்
கீதங்கள் பாடி,Geedhangal Paadi - பலவகைப் பாட்டுக்களைப்பாடி
வெறுப்பு இன்றி,Veruppu Indri - (இருள் தருமா ஞாலத்தில் இருக்க வேண்டியதாகிறதே! என்கிற வெறுப்பு இல்லாமல்
ஞானத்து,Gnanathu - இந்நிலத்தில்
மிக்கார்,Mikkaar - சிறப்புற வாழ்கின்றார்கள்
நீர்,Neer - நீங்கள்
மேவி,Mevi - அவர்களைச்சிட்டி
தொழுது,Thozhudhu - வணங்கி
உய்மின்,Uymin - உஜ்ஜிவித்துப்போங்கள்