| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3135 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தேவதாந்த்ரங்களை ஆஸ்ரயித்து அபேக்ஷிதங்களை பெற்றார் இல்லையோ என்னில்- அந்த தேவதைகள் ஆஸ்ரித அபேக்ஷிதங்கள் கொடுக்க வல்லவாம் படி பண்ணினான் எம்பெருமானே - அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.) 8 | இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8 | இறுக்கும் இறை,Irukkum Ir - அவரவர்கள் செலுத்த வேண்டிய கடன்களை இறந்து,Iranthu - செலுத்தி உண்ண,Unna - அவரவர்கள் வாழும்படி எவ்வுலகுக்கும்,Evvulagum - வேறுவேறு வகைப்பட்டருசியையுடைய ஸமஸ்தலோகத்துக்கும் தன் மூர்த்தி,Than Murthi - தன்னுடைய சரீரங்களை தெய்வங்கள் ஆக,Dheyvangal Aaga - அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கைக்கு உரிய தேவதைகளாக நிறுத்தினான்,Niruthinaan - ஏற்பாடு பண்ணினவன் அத்தெய்வநாயகன் தானே,Attheyvanaayan Kan Thaane - ஸர்வதேவதாநாயநனான அப்பெருமானே யவன் (ஆகையால்) மறு திரு மார்வன அவன் தன் பூதங்கள்,Maru Thiru Maarvanavan Than Pudhangal - ஸ்ரீவத்ஸமென்னும் மறுவைத் திருமலிலே உடையனான அப்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்கள் கீதங்கள் பாடி,Geedhangal Paadi - பலவகைப் பாட்டுக்களைப்பாடி வெறுப்பு இன்றி,Veruppu Indri - (இருள் தருமா ஞாலத்தில் இருக்க வேண்டியதாகிறதே! என்கிற வெறுப்பு இல்லாமல் ஞானத்து,Gnanathu - இந்நிலத்தில் மிக்கார்,Mikkaar - சிறப்புற வாழ்கின்றார்கள் நீர்,Neer - நீங்கள் மேவி,Mevi - அவர்களைச்சிட்டி தொழுது,Thozhudhu - வணங்கி உய்மின்,Uymin - உஜ்ஜிவித்துப்போங்கள் |