| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3136 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (பகவத் பக்தர்கள் இருவகைப் படுவார்கள். பலவகைக் கைங்கரியங்களைச் செய்து போது போக்குவாரும், குணாநுபவத்திலே ஊன்றிப்போருவாரும், அப்படிப்பட்ட பக்தர்கள் பூமியெங்கும் பரந்தார்கள்) 9 | மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9 | வேதம் புனிதம் இருக்கை,Vedham Punitam Irugai - வேதத்தினுள் பரமபவித்திரமான புருஸூக்தம் முதலியவற்றை நாவில் கொண்டு,Naavil Kondhu - நாவினால் உச்சரித்துக்கொண்டு ஞானம் விதி பிழையாமே,Gnanam Vidhi Pizhaiyaame - பக்திமார்க்கம் தவறாதபடி பூவில்,Poovil - மலரோடு கூடின புகையும்,Pugaiyum - தூபமும் விளக்கும்,Vilakum - தீபமும் சாந்தமும்,Saanthamum - சந்தனமும் நீரும்,Neerum - திருமஞ்சனமும் மலிந்து,Malindhu - பூர்ணமாகக்கொண்டு அச்சுதன் தன்னை,Achchudhan Thannai - எம்பெருமானை மேவி,Mevi - அடைந்து தொழும்,Thozhum - ஸாங்கரியம் செய்கிற அடியாரும்,Adiyarum - அடியார்களையும் பகவரும்,Bhagavarum - குணாநுபவ ரிஷ்டர்களையும் உலகு மிக்கது,Ulaku Mikkatu - இவ்வுலகமானது அதிகமாகக் கொண்டது (ஆன பின்பு) நீங்கள்,Neengal - நீங்கள் மேவிதொழுது.,Mevi Thozhudhu - (அவர்களை) விரும்பி வணங்கி உய்ம்மின்,Uymin - உஜ்ஜீவியுங்கள். |