Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3138 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3138திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இத் திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகல விதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11
தன் அடியார்க்கு,Than adiyarkku - தன் அடியவர்களுக்கு
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே,Kaliyugam ondrum indrikke - கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி
அருள் செய்யும்,Arul seyyum - கிருபை பண்ணுகின்ற
மலியும் சுடர் ஒளி மூர்த்தி,Maliyum sudar oli moorthi - மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும்
மாயம் பிரான்.,Maayam pirano - வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான
கண்ணன் தன்னை,Kannan thannai - எம்பெருமானைக் குறித்து
கலி வயல்,Kali vayal - நிறைந்த வயல்களையுடைய
தென் திசை,Then disai - தென் திசையிலுள்ள
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான
காரி மாறன் சடகோபன்,Kaari maaran Sadagopan - ஆழ்வார்
புகழ்,Pugazh - கீர்த்திமிக்க
ஆயிரத்து பத்து,Aayirathu paththu - ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி
உள்ளத்தை,Ullathai - (கற்பாருடைய) நெஞ்சை
மாசு அருக்கும்,Maasu arukkum - கல்மஷமற்றதாகச் செய்