| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3139 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து ‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி.) 1 | மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம் ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1 | மாறு அறுசோதி,Maaru aruchothi - அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய செய்ய வாய்,Seiyya vaai - சிவந்த திருப்பவளத்தையுடைய என் மணி குன்றத்தை,En mani kunraththai - மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும், ஆக அது சீலனை,Aaga adhu seelanai - குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும் ஆதி மூர்த்தியை,Aadhi moorthiyai - முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை நாடி,Naadi - தேடி பாக அறவு எய்தி,Paaga aravu eidhi - உடம்பில் பசுமை நிறம் அழிவடைந்து அறிவு இழந்து,Arivu izhanthu - அறிவும் இழக்கப்பெற்று ஏனை நானையம்,Ena nanaiyam - எத்தனை காலமிருப்போம்? தோழி,Thozi - தோழியே! ஏசு அறும்,Aesu arum - ஏசுவதற்கென்றே அற்றுத்தீர்ந்த ஊரவர்,Ooravar - ஊராருடைய கவ்வை,Kavvai - பழிமொழி என் செய்யும்,En seyyum? - யாது செய்யும்? |