| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3140 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.) 2 | என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2 | என் செய்ய தாமரை கண்ணன்,En seyya thaamarai kannan - சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன் என்னை,Ennai - என்னுடைய நிறை,Nirai - அடக்கத்தை கொண்டான்,kondaan - கொள்ளை கொண்டான்; (அதனாலே) முன்,Mun - முதன் முதலாக செய்ய மாமை இழந்து,Seyya maamai izhandhu - விலக்ஷணமான மேனி நிறம் அழியப்பெற்று மேனி மெலிவு எய்தி,Meni melivu eidhi - சரீரமும் மெலிந்து என் செய்ய வாயும்,En seyya vaayum - எனது சிவந்தவாயும் கரு கண்ணும்,Karu kannum - கறுத்தகண்ணும் பயப்பு ஊர்ந்து,Bayappu oornthu - பாலை நிறம் படரப் பெற்றன. தோழீ,Thozhi - தோழியே! இனி,Ini - இந்நிலைமையானபின்பு நம்மை,Nammai - நம் விஷயத்திலே ஊரவர் கவ்வை,Ooravar kavvai - ஊராருடைய பழிமொழி என் செய்யும்,En seyyum - என்ன பண்ணும்? |