Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3140 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3140திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.) 2
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2
என் செய்ய தாமரை கண்ணன்,En seyya thaamarai kannan - சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன்
என்னை,Ennai - என்னுடைய
நிறை,Nirai - அடக்கத்தை
கொண்டான்,kondaan - கொள்ளை கொண்டான்; (அதனாலே)
முன்,Mun - முதன் முதலாக
செய்ய மாமை இழந்து,Seyya maamai izhandhu - விலக்ஷணமான மேனி நிறம் அழியப்பெற்று
மேனி மெலிவு எய்தி,Meni melivu eidhi - சரீரமும் மெலிந்து
என் செய்ய வாயும்,En seyya vaayum - எனது சிவந்தவாயும்
கரு கண்ணும்,Karu kannum - கறுத்தகண்ணும்
பயப்பு ஊர்ந்து,Bayappu oornthu - பாலை நிறம் படரப் பெற்றன.
தோழீ,Thozhi - தோழியே!
இனி,Ini - இந்நிலைமையானபின்பு
நம்மை,Nammai - நம் விஷயத்திலே
ஊரவர் கவ்வை,Ooravar kavvai - ஊராருடைய பழிமொழி
என் செய்யும்,En seyyum - என்ன பண்ணும்?