Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3142 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3142திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்படி தன்னைப் பிரிந்து துக்கப்படா நிற்க வாராத நிர்க்ருணனை -நீ என் செய்ய ஆசைப்படுகிறாய் என்ன -தன் பக்கலிலே எனக்கு அதி மாத்ர ப்ரேமத்தை விளைப்பித்த பரம உபகாரகனையே நீ நிர்க்ருணன் என்று சொல்லுவது என்று தோழியை கர்ஹிக்கிறார்.) 4
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4
தோழீ,Thozhi - தோழியே!
ஊரவர்,Ooravar - ஊராருடைய
கவ்வை,Kavvai - பழமொழிகளை
எரு இட்டு,Eru ittu - எரவாக இட்டு
அன்னை சொல் நீர் படுத்து,Annai sol neer padutthu - தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி
ஈரம் நெல் வித்தி,Eeram nel vithi - ஆசையாகிற நெல்லை விதைத்து
முளைத்த,Mulaittha - முளைப்பித்த
நெஞ்சம் பெரு செயுள்,Nenjam peru seiyul - நெஞ்சாகிற பெரிய வயலிலே
பேர் அமர் காதல்,Per amar kaadhal - பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை
கடல் புரைய,Kadal puraiya - கடல்போலே அபரிச்சிந்நமாக
விளைவித்த,Vilaivittha - பலிக்கும்படிபண்ணின
கார் அமர் மேனி,Kaar amar meni - கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய
அடியனே,Adiyane - கடியனோ? (கடியனல்லன்)