| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3142 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்படி தன்னைப் பிரிந்து துக்கப்படா நிற்க வாராத நிர்க்ருணனை -நீ என் செய்ய ஆசைப்படுகிறாய் என்ன -தன் பக்கலிலே எனக்கு அதி மாத்ர ப்ரேமத்தை விளைப்பித்த பரம உபகாரகனையே நீ நிர்க்ருணன் என்று சொல்லுவது என்று தோழியை கர்ஹிக்கிறார்.) 4 | ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4 | தோழீ,Thozhi - தோழியே! ஊரவர்,Ooravar - ஊராருடைய கவ்வை,Kavvai - பழமொழிகளை எரு இட்டு,Eru ittu - எரவாக இட்டு அன்னை சொல் நீர் படுத்து,Annai sol neer padutthu - தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி ஈரம் நெல் வித்தி,Eeram nel vithi - ஆசையாகிற நெல்லை விதைத்து முளைத்த,Mulaittha - முளைப்பித்த நெஞ்சம் பெரு செயுள்,Nenjam peru seiyul - நெஞ்சாகிற பெரிய வயலிலே பேர் அமர் காதல்,Per amar kaadhal - பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை கடல் புரைய,Kadal puraiya - கடல்போலே அபரிச்சிந்நமாக விளைவித்த,Vilaivittha - பலிக்கும்படிபண்ணின கார் அமர் மேனி,Kaar amar meni - கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய அடியனே,Adiyane - கடியனோ? (கடியனல்லன்) |