| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3143 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நான் சொல்லுகிறபடியே குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குண ஹீனன் ஆனாலும் என் நெஞ்சம் அவனை அல்லது அறியாது -உனக்கு அதில் ஒரு பலம் இல்லை என்கிறாள்.) 5 | கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே! துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5 | கடியன்,Kadiyan - தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன் நெடியமால்,Nediya maal - போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்; உலகம் கொண்ட அடியன்,Ulagam kondu adiyan - உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்; அறிவு அருமேனி மாயத்தான்,Arivu arumeni maayathaan - நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்; கொடியன்,Kodiyaan - அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்; ஆகிலும்,Aakilum - இங்ஙனே யானாலும் கொடிய என் நெஞ்சம்,Kodiya en nenjam - கொடிதான என்னுடைய மனமானது அவனே என்று கிடக்கும்,Avane endru kidakkum - அப்பெருமானே தஞ்சமென்று கிடக்கின்றது; எல்லே,Elle - என்னே! துடிகொள் இடை,Thudikol idai - உடுக்கை போன்ற இடையையும் மடம்,Madham - மடப்பத்தையுமுடைய தோழீ,Thozhi - தோழியே! அன்னை,Annai - என் தாய் என் செய்யும்,En seiyyum - என்ன செய்யக்கூடும்? |