| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3144 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குண சேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன என்கிறாள்.) 6 | அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்! என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன் முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6 | தோழிமீர்,Thozhimeer - தோழிமார்களே! முன்னை அமரர் முதல்வர்,Munnai amarar mudhalvar - நித்ய ஸூரிநாதனும் வண் துவராபதி மன்னன்,Van dhuvaraapathi mannan - அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும் மணிவண்ணன்,Manivannan - நீலமணிவண்ணனுமான வாசுதேவன்,Vaasudevan - கண்ணபிரானாகிற வலையுள்,Valaiyul - வலையினுள்ளே அகப்பட்டேன்,Agappattaen - சிக்கிக் கொண்டேன்; இனி,Ini - ஆன பின்பு என்னை,Ennai - என் திறத்திலே உமக்கு ஆசை இல்லை,Umakku aasai illai - நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை; அன்னை என் செய்யில்,Annai en seiyyil - தாய் எது செய்தால்தான் என்ன? என் ஊர் என் சொல்லில்,En oor en sollil - என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன? |