Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3144 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3144திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குண சேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன என்கிறாள்.) 6
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6
தோழிமீர்,Thozhimeer - தோழிமார்களே!
முன்னை அமரர் முதல்வர்,Munnai amarar mudhalvar - நித்ய ஸூரிநாதனும்
வண் துவராபதி மன்னன்,Van dhuvaraapathi mannan - அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும்
மணிவண்ணன்,Manivannan - நீலமணிவண்ணனுமான
வாசுதேவன்,Vaasudevan - கண்ணபிரானாகிற
வலையுள்,Valaiyul - வலையினுள்ளே
அகப்பட்டேன்,Agappattaen - சிக்கிக் கொண்டேன்;
இனி,Ini - ஆன பின்பு
என்னை,Ennai - என் திறத்திலே
உமக்கு ஆசை இல்லை,Umakku aasai illai - நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை;
அன்னை என் செய்யில்,Annai en seiyyil - தாய் எது செய்தால்தான் என்ன?
என் ஊர் என் சொல்லில்,En oor en sollil - என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன?