| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3145 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமான் பக்கலில் குண ஹாநி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம் அவனைக் காணப் பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள்.) 7 | வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக் கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7 | கலைகொள்,Kalaikol - சேலை யணிந்ததும் அகல்,Akal - அகன்றதுமான அல்குல்,Alkull - நிதம்பத்தையுடைய தோழீ,Thozhi - தோழியே, என்னை,Ennai - என்னை வலையுள்,Valaiyul - (தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற) வலையிலே அகப்படுத்து,Agappaduthu - சிக்கிக்கொள்ளும்படி செய்து நல் நெஞ்சம்,Nal nenjam - (எனது) நல்ல நெஞ்சையும் கூவிக்கொண்டு,Koovikkondu - அடியறுத்து அழைத்துக்கொண்டு அலைகடல் பள்ளி அம்மானை,Alaikadal palli ammaanai - அலை யெறிகின் நாடலிலே (ஏகாந்தமாகப்) பள்ளிகொள்ளும் ஸ்வாமியாய். ஆழி பிரான் தன்னை,Aazhi praan thannai - திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள மஹோபகாரகனாக எம்பெருமானை நம் கண்களால் கண்டு,Nam kangalal kandu - நமது கண்களாலே பார்த்து தையலார் முன்பே,Thaiyalar munbae - (பழிசொல்லுகிற) மாதர்களின் நண்வட்டத்தில் தலையில்,Thalaiyil - தலையாலே வணங்கவும் ஆம் கொலோ,Vanangavum aam kolo - வணங்கவும் கூடுமோ? |