Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3146 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3146திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார் “அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக் கவிழ் தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள்.) 8
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8
தோழீ,Thozhi - தோழியே!
பேண் முலை உண்டு,Paen mulai undu - பூதனையின் முலையைப் புசித்து
சாடல் பாய்ந்து,Saadal paayndhu - சகடத்தை முறித்துத் தள்ளி
மருது இடைபோய்,Marudhu idaipoy - இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று
முதல் சாய்த்து,Mudhal saaythu - (அற்றை) வேரோடே தள்ளி
புள்வாய் பிளந்து,Pulvaay pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்து
களிறு அட்ட,Kaliru atta - குவளையபீட யானையைக் கொன்று முடித்த
தூ முறுவல் தொண்டை வாய்பிரானை,Thoo muruval thondai vaaypiraanai - பரிசுத்தமான மந்தஹாஸத்தையும் கொங்கைக் களிபோனற் திருபப்பவளத்தையுமுடைய பெருமானை
அன்னையர் நாண,Annaiyar naana - தாய்மார் தலைதொங்கும்படியாக
உரம் உறுகின்றது,Uram urugindrathu - நாம் கிட்டுவது
ஏ நான் கொலோ,E naan kolo - என்றைக்கோ?