| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3146 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார் “அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக் கவிழ் தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள்.) 8 | பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ? நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8 | தோழீ,Thozhi - தோழியே! பேண் முலை உண்டு,Paen mulai undu - பூதனையின் முலையைப் புசித்து சாடல் பாய்ந்து,Saadal paayndhu - சகடத்தை முறித்துத் தள்ளி மருது இடைபோய்,Marudhu idaipoy - இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று முதல் சாய்த்து,Mudhal saaythu - (அற்றை) வேரோடே தள்ளி புள்வாய் பிளந்து,Pulvaay pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்து களிறு அட்ட,Kaliru atta - குவளையபீட யானையைக் கொன்று முடித்த தூ முறுவல் தொண்டை வாய்பிரானை,Thoo muruval thondai vaaypiraanai - பரிசுத்தமான மந்தஹாஸத்தையும் கொங்கைக் களிபோனற் திருபப்பவளத்தையுமுடைய பெருமானை அன்னையர் நாண,Annaiyar naana - தாய்மார் தலைதொங்கும்படியாக உரம் உறுகின்றது,Uram urugindrathu - நாம் கிட்டுவது ஏ நான் கொலோ,E naan kolo - என்றைக்கோ? |