| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3147 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (என் பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளை கொண்டு எட்டா நிலத்திலிருக்கிறவனை ஸகல லோகமும் பழிக்கும்படி மடலூரக் கடவேனென்று தோழிற்குத் தனது நெஞ்சை வெளியிடுகிறாள்.) 9 | நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9 | என் தோழி,En thozhi - எனது தோழியே!, என்னை,Ennai - என்பக்கலில் நின்றும் நாணும்,Naanum - நாணத்தையும் நிறையும்,Niraiyum - அடக்கத்தையும் கவர்ந்து,Kavarnthu - கொள்ளை கொண்டு நல் நெஞ்சம் கூய்க்கொண்டு,Nal nenjam kooykondru - (எனது) நல்ல நெஞ்சையும் ஆகர்ஷித்துக்கொண்டு சேண் உயர் நாளத்து இருக்கும்,Sen uyar naalathu irukkum - மிகவும் உயர்ந்த பரமபதத்திலெழுந்தருளியிருக்கிற தேவபிரான் தன்னை,Devapiraan thannai - நிதய் ஸூரிநாதனை உலகு தோறு,Ulaku thoaru - ஒவ்வொருவலகத்திலும் அவர் தூற்றி,Avar thootri - பழிதூற்றி ஆம் கோணைகள் செய்து,Aam konaigal seydhu - செய்யக்கூடிய மிறுக்குக் களைச்செய்து கு திரி ஆய்,Ku thiri aay - அடங்காத பெண்ணாய் மடல் ஊர்தும்,Madal oordhum - மடலூரக் கடவோம்; ஆணை,Aanai - இது திண்ணம் |