| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3148 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிறபடி.) 10 | யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம் யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார் நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10 | யா மடம் இன்றி,Yaa madam indri - ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல் தெருவு தோறு,Theruvu thooru - வீதிகள் தோறும் புகுந்து அயல் தைய லார்,Ayal thaya laar - அயல் பெண்களும் நாடும்,Naadum - ஸகல லோகமும் நா மடங்கா பழி தூற்றி,Naa madangaa pazi thootri - நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி இரைக்க,Irakka - இரைச்சல் போடும்படி யாம்,Yaam - நாம் மடல் ஊர்ந்தும்,Madal oordhum - மடலூர்ந்தாகிலும் ஆழி அம் கை நம்பிரானுடைய,Aazhi am kai nambiraanudaiya - திருவாழியைத் தரித்த அழகிய திருக்கையையுடைய எம்பெருமானுடைய தூ மடல்,Thoo madal - பரிசுத்தமான இதழ்களையுடைய தண் அம் துழாய் மலர்,Than am thuzhaay malar - குளிர்ந்தழகிய திருத்துழாய்மலர் மாலையை கொண்டு,Kondu - அவன் தரப்பெற்று சூடுவோம்,Sooduvom - தலையில் அணிவோம். |