| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3149 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்) 11 | இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11 | இரைக்கும்,Iraikum - கோக்ஷிக்கின்ற ஈறா கடல் கண்ணன்,Eeraa kadal kannan - கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன் கண்ணபிரான் தன்னை,Kannapiraan thannai - கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து விரை கொள்பொழில்,Virai kolpozhil - பரிமனம்மிக்க சோலைகளையுடைய குருகூர்,Gurukoor - திருநகரியில் அவதரித்த சடகோபன்,Sadagopan - ஆழியார் சொன்ன,Sonna - அருளிச் செய்த நிரைகொள்,Nirai kol - சாஸ்த்ரமரியாதைப்படியே ஒழுங்குகளைக்கொண்ட அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையாமைந்த ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - ஆயிரம் பாசுரங்களிலுள்ளே இயற்றும்,Iyarrum - இப்பதிகத்தை உரைக்க வல்லார்க்கு,Urakk valarkkum - ஓதவல்லவர்களுக்கு தம் ஊர் எல்லாம்,Tham oor ellaam - தம்தம் இருப்பிடமெல்லாம் வைகுந்தம் ஆகும்,Vaikundham aagum - பரமபதம் போலே பேரின்பசீலமாக விளங்கும் |