திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3149 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3149திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்) 11
இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11
பதவுரை Show / Hide
இரைக்கும்,Iraikum - கோக்ஷிக்கின்ற
ஈறா கடல் கண்ணன்,Eeraa kadal kannan - கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன்
கண்ணபிரான் தன்னை,Kannapiraan thannai - கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து
விரை கொள்பொழில்,Virai kolpozhil - பரிமனம்மிக்க சோலைகளையுடைய
குருகூர்,Gurukoor - திருநகரியில் அவதரித்த
சடகோபன்,Sadagopan - ஆழியார்
சொன்ன,Sonna - அருளிச் செய்த
நிரைகொள்,Nirai kol - சாஸ்த்ரமரியாதைப்படியே ஒழுங்குகளைக்கொண்ட
அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையாமைந்த
ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - ஆயிரம் பாசுரங்களிலுள்ளே
இயற்றும்,Iyarrum - இப்பதிகத்தை
உரைக்க வல்லார்க்கு,Urakk valarkkum - ஓதவல்லவர்களுக்கு
தம் ஊர் எல்லாம்,Tham oor ellaam - தம்தம் இருப்பிடமெல்லாம்
வைகுந்தம் ஆகும்,Vaikundham aagum - பரமபதம் போலே பேரின்பசீலமாக விளங்கும்