Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3150 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3150திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஜகத்தடங்கலும் இருள்மூடி நின்றது; ரக்ஷகனென்று பேர் பெற்றிருக்கும் ஸர்வேச்வரனோ வந்து ரக்ஷித்தருள்கின்றிலன்; இனியென்னை ரக்ஷிப்பார் ஆரென்கிறாள்.) 1
ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1
ஊர் எல்லாம் துஞ்சி,Oor ellam thunji - ஊர் முழுவதும் உறங்கிப்போய்
உலகு எல்லாம்,Ulagu ellam - உலகம் முழுவதும்
கள் இருளாய்,Kal irulaay - காடாந்தகராம்மிக்கு
நீண்டது,Neendathu - நெடுகிச் செல்கின்றது;
ஆல்,Aal - அந்தோ!, (இந்நிலைமையில்)
பார் எல்லாம் உண்ட,Paar ellam unda - பூமி முழுவதையும் (பிரளயகாலத்திலே) வயிற்றிலே வைத்து ரக்ஷித்த
நம் பாம்பு அணையான்,Nam paambu anaiyaan - சேஷசாயியான எம்பெருமான்
வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலம்
நீர் எல்லாம் தேதி,Neer ellam thedi - நீர் நிலமெல்லாம் அலையடங்கித் தெளிந்து
ஓர் நின் இரவு ஆய்,Oor nin iravu aay - (பகல் கலசாத) ஒரே காளராத்ரியாய்
இனி,Ini - இப்படியான பின்பு
வல் வினை யேன்,Val vinai yaen - கொடும்பாவியான என்னுடைய
ஆவி,Aavi - உயிரை
காப்பார்,Kaappaar - ரக்ஷிப்பவர்
ஆர்,Aar - யாவர்?
எல்லே,Elle - என்னே!