Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3151 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3151திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இத்தசையிலே கிருஷ்ணனும் வந்திலன் –மஹா பாபியான என்னோட்டை சம்பந்தத்தால் நெஞ்சே நீயும் பாங்கு இன்றியே ஒழியா நின்றாய் – என்கிறாள்) 2
ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2
ஆழ் கடல்,Aazh kadal - ஆழ்ந்த கடலையும்
மண்,Man - பூமியையும்
விண்,Vin - ஆகாசத்தையும்
மூடி,Moodi - மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி)
மா வீசாரம் ஆய்,Maa veesaram aay - பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு
வல்,Val - வலிதான
ஓர் இரவு ஆய்,Or iravu aay - ஒரே ராத்திரியாய்
நீண்டது,Neendadhu - நெடுகிச் செல்லா நின்றது;
ஆல்,Aal - அந்தோ!
காவி சேர் கண்ணன்,Kaavi seer kannan - நெய்தல் பூப்போன்ற நிறத்தையுடையனான
என் கண்ணனும்,En kannanum - எனக்குத் தஞ்சமான கண்ணபிரானும்
வாராவி,Vaaraavi - வந்து முகங்காட்டுகின்றிலன்
பாவியேன்,Paaviyin - பாவியான என்னுடைய
நெஞ்சமே,Nenjame - மனமே!
நீயும்,Neeyum - நீ தானும்
பாங்கு அல்லை,Paangu allai - அணுகூலமாக இருக்கிறாயில்லை.
இனி,Ini - இப்படியான பின்பு
ஆவி காப்பார்,Aavi kaappar - பிராணனை ரக்ஷித்துத் தருவார்
ஆர்,Aar - யாவர்? (ஒருவருமில்லை.)