| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3153 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (சண்டார்க்குப் பொறுக்க வொண்ணாதபடி நான் துன்பப்பட்டாநிற்க, எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரிவிக்கிரமன் வருகின்றிலன்; என்னுடைய சிந்தை நோய் தீரும் வழி என்னோ! என்கிறாள்.) 4 | பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால் எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4 | பெண் பிறந்தார் எய்தும்,Pen piranthaar eydum - பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அடைகின்ற பெரு துயர் காண்கிலேன் என்று,Peru thuyar kaangilaeen endru - பெருந்துக்கத்தை காணமாட்டேன்’ என்றெண்ணி ஒண் சுடரோன்,On sudaron - ஸூரியன் வாராது ஒளித்தான்,Vaaradhu o̱lithaan - வாராதே மறைந்து போனான் போலும் இ மண் அளந்த,EmanAlandha - இப்பூமியை யளந்து கொண்டவனும் பெரிய கண்,Periya kan - பரந்த திருக்கண்களையுடையவனும் செம்வாய்,Semvai - சிவந்த அதரத்தையுடையவனும் எம் கார் எறு,Em kaar eru - கறுத்த திருமேனியையுடையவனும் காளைபோன்றவனுமான எம்பெருமான் வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலன்; ஆல்,Aal - அந்தோ! எண்பெரிய,Enperiya - நினைக்கவும் முடியாத சிந்தை நோய்,Sinthai noy - மனோவியாதியை என்னை,Ennai - என்னிடத்தில் நின்றும் தீட்பார்,Theebar - நீக்கவல்லவர்கள் ஆர்,Aar - யார் சொல்? |