Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3153 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3153திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (சண்டார்க்குப் பொறுக்க வொண்ணாதபடி நான் துன்பப்பட்டாநிற்க, எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரிவிக்கிரமன் வருகின்றிலன்; என்னுடைய சிந்தை நோய் தீரும் வழி என்னோ! என்கிறாள்.) 4
பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4
பெண் பிறந்தார் எய்தும்,Pen piranthaar eydum - பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அடைகின்ற
பெரு துயர் காண்கிலேன் என்று,Peru thuyar kaangilaeen endru - பெருந்துக்கத்தை காணமாட்டேன்’ என்றெண்ணி
ஒண் சுடரோன்,On sudaron - ஸூரியன்
வாராது ஒளித்தான்,Vaaradhu o̱lithaan - வாராதே மறைந்து போனான் போலும்
இ மண் அளந்த,EmanAlandha - இப்பூமியை யளந்து கொண்டவனும்
பெரிய கண்,Periya kan - பரந்த திருக்கண்களையுடையவனும்
செம்வாய்,Semvai - சிவந்த அதரத்தையுடையவனும்
எம் கார் எறு,Em kaar eru - கறுத்த திருமேனியையுடையவனும் காளைபோன்றவனுமான எம்பெருமான்
வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலன்;
ஆல்,Aal - அந்தோ!
எண்பெரிய,Enperiya - நினைக்கவும் முடியாத
சிந்தை நோய்,Sinthai noy - மனோவியாதியை
என்னை,Ennai - என்னிடத்தில் நின்றும்
தீட்பார்,Theebar - நீக்கவல்லவர்கள்
ஆர்,Aar - யார் சொல்?