Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3154 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3154திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராய்கிறிலர்-அவர்கள் உதவாத போது உதவும் கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்.) 5
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரும்
தோழியரும்,Thozhiyarum - தோழிமாரும்
நீர் என்னே என்னாதே,Neer enne ennaadhe - ‘இப்படியும் ஒரு நீர்மையுண்டாவதே!’ என்று என் திறத்தில் இரங்காமல்
நீள் இரவும்,Neel iravum - நீண்ட இராமுழுவதும்
துஞ்சவர்,Thunjavar - உறங்காநிற்பர்கள்;
ஆல்,Aal - அந்தோ!;
கார் அன்ன,Kaar anna - மேகத்தையொத்த
மேனி,Meni - திருமேனியையுடைய
நம் கண்ணனும்,Nam kannanum - நமது கண்ணபிரானும்
வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றிலன்;
வல்வினை யென் பின் நின்று,Valvinai yen pin nindru - பெரும்பாவியான நான் முடிந்த பின்பும் நின்று கொண்டு
பேர்,Per - என் பேர்
என்னை மாயாது,Ennai maayadhu - என்னை முடிய வொட்டுகிறதில்லை
என்னை ஆராய்வார் ஆர்,Ennai araayvaar aar - என்னைப் பற்றி சிந்திப்பார் ஆருமில்லையே!