Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3155 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3155திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாது இருக்கிற என்னை ரஷிப்பார் ஆர் -என்கிறாள்) 6
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6
பின் நின்ற,Pin nindra - பிடரிபீடித்துள்ளுவதற்காகப் பின் தொடர்ந்து நின்ற
காதல் நோய்,Kaadhal noy - ப்ரேம விரோதியானது
நெஞ்சம்,Nenjam - (தன்குப்பிறப்பிடமான நெஞ்சை)
பெரிது,Peridhu - மிகவும்
அடும்,Adum - அழிக்கின்றது
ஆல்,Aal - அந்தோ
இரா ஊழி,Iraa uuzhi - இரவாகிய கல்பமானது
முன் நின்று,Mun nindru - முன்னேயிருந்து
கண் புதைய,Kan pudhaiya - கண்தெரியாதபடி
முடிந்து,Mudindhu - மறைந்தது
ஆல்,Aal - அந்தோ;
மண் நின்ற சக்கரத்து,Man nindra chakkarathu - எப்போதும் கை நழுவாது நின்ற திருவாழியாழ்வானையுடைய
எம் மாயவனும்,Em maayavanum - எம்பிரானும்
வாரான்,Vaaraan - வருகின்றிலன்
ஆல்,Aal - ஆதலால்
நின்ற நீள் இ ஆவி,Nindra neel i aavi - முடியாதே நின்று நீள்கின்ற இவ்வுயிரை
இவ்விடத்து,Ivvidathu - இந்த நிலைமையிலே
காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பார்யார்?