| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3155 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாது இருக்கிற என்னை ரஷிப்பார் ஆர் -என்கிறாள்) 6 | பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6 | பின் நின்ற,Pin nindra - பிடரிபீடித்துள்ளுவதற்காகப் பின் தொடர்ந்து நின்ற காதல் நோய்,Kaadhal noy - ப்ரேம விரோதியானது நெஞ்சம்,Nenjam - (தன்குப்பிறப்பிடமான நெஞ்சை) பெரிது,Peridhu - மிகவும் அடும்,Adum - அழிக்கின்றது ஆல்,Aal - அந்தோ இரா ஊழி,Iraa uuzhi - இரவாகிய கல்பமானது முன் நின்று,Mun nindru - முன்னேயிருந்து கண் புதைய,Kan pudhaiya - கண்தெரியாதபடி முடிந்து,Mudindhu - மறைந்தது ஆல்,Aal - அந்தோ; மண் நின்ற சக்கரத்து,Man nindra chakkarathu - எப்போதும் கை நழுவாது நின்ற திருவாழியாழ்வானையுடைய எம் மாயவனும்,Em maayavanum - எம்பிரானும் வாரான்,Vaaraan - வருகின்றிலன் ஆல்,Aal - ஆதலால் நின்ற நீள் இ ஆவி,Nindra neel i aavi - முடியாதே நின்று நீள்கின்ற இவ்வுயிரை இவ்விடத்து,Ivvidathu - இந்த நிலைமையிலே காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பார்யார்? |