திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3156 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3156திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இப் பேரிருளிலே என்செய்வேனென்று. உறங்காத தெய்வங்களைக் குறித்து முறையிடுகின்றாள்.) 7
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச் சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த் தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால் தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7
பதவுரை Show / Hide
இவ்விடத்து,Ivvidathu - இந்நிலையில்
காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பாரார்?
சுங்கு இருளின்,Sungu irulin - நன்றாக சொரிந்த இருளையுடையதாயும்
நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிதான பணித்துளியையுடையதாயும்
சேண் பாலது,Sen paaladhu - மிக நீண்டிருப்பதான
ஊழி ஆய்,Uuzhi aay - சல்பமாய்க்கொண்டு
செல்கின்ற,Selginra - செல்லாநிற்கிற
கங்குல் வாய்,Kangul vaay - ராத்திரியிடத்து
தூ பால,Thoo paal - அழுக்கற்ற ஸ்வபாவத்தையுடையதாய்
வெண்,Ven - வெளுத்ததான
சங்கு,Sangu - சங்கையும்
சக்கரத்தன்,Chakkarathan - சக்கரத்தையுமுடையனானவன்
தோன்றான்,Thonaan - தோன்றிக்காட்சி தருகின்றவன்
தெய்வத்தாள்,Deyvathaal - தேவதைகளே!
நி பால கல் வினையேன்,Ni paal kal vinaiyene - மிகக் கொடியபாவங்களை யுடையேனான நான்
என் செய்வேன்?,En seyven - என்ன பண்ணுவேன்?