Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3157 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3157திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (தென்றலோ நலிகின்றது. கண்ணனோ வருகின்றிலன் , என் செய்வேனென்று மீண்டும் தெய்வங்களையே நோக்கி முறையிடுகின்றாள்.) 8
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8
தெய்வங்காள்,Deyvangal - தெய்வங்களே!
ஓர் இரவு,Or iravu - ஒரு இராப்பொழுதானது
ஏழ் ஊழி ஆய்,Ezh uuzhi aay - ஏழு சல்பசாலமாய்க்கொண்டு
மெய்,Mei - மெய்யே
வந்து நின்று,Vandhu nindru - முன்னே வந்து நின்று
என்ற ஆவி,Endra aavi - என்னுடைய உயிரை
மெலிவிக்கும்,Melivikkum - இளைக்கப்பண்ணா நின்றது;
கை வந்த சக்கரத்து,Kai vandha chakkarathu - கையிலே ஸஜ்ஜனாயிருக்கிற் திருவாழி யாழ்களையுடைய
என் கண்ணனும்,En kannanum - எனது கண்ணபிரானும்
வாரான்,Vaaraan - வருகின்றிலன்
தைவந்த,Thaivandha - தடவினால் போலிருக்கின்ற
தண் தென்றல்,Than thendral - குளிர்ந்த தென்றலானது
வெஞ்சுடரில் அடும்,Vensudaril adum - வெள்ளிய நெருப்பிற் காட்டிலும் அதிகமாகச் சுடாநின்றது.