Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3158 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3158திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இரவோ மிகவும் நலியா நின்றது; ஆதித்தியனும் ஆவிர்ப்பளிக்கின்றிலன்; எம்பெருமானும் வந்து தோன்றுகின்றிலன்; நான் நின்று நோவுபடுமித்தனை போக்கி என் பாதையைப் போக்குவார் ஆருமில்லையே யென்கிறாள்.) 9
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9
வீங்கி இருளின்,Veengi irulin - மிகச் செறிந்த இருளையுடைத்தாய்
நுண் துளி அய்,Nunn thuli ay - நுண்ணிய பனித்துளியை யுடையதாய்க் கொண்டு
தான்,Thaan - இராப்பொழுதானது
வெம் சுடரில்,Vem sudaril - வெவ்விய நெருப்பிற் காட்டில்
சுடும்,Sudum - சுடர்கின்றது
ஆல்,Aal - அந்தோ! (இந்த நிலைமையில்)
அம் சுடா,Am sudaa - அழகிய ஒளியையுடையனான
வெய்யோன்,Veyyon - ஸூரியனுடைய
அணி நெடு தேர்,Ani netu ther - அழகிய பெரிய தேரும்
தோன்றாது,Thonaadhu - தென்படவில்லை
செம் சுடர் தாமரை கண் செல்லனும்,Sem sudar thaamarai kan chellanum - சிவந்த காந்தியையுடைய தாமரை போன்ற திருக்கண்களையும் ஸ்ரீமானும்
வாரான்,Vaaraan - வந்து தோன்றவில்லை
ஆல்,Aal - ஆதலால்
நின்று உருகுகின்றேன்,Nindru uruguginraen - நிரந்தரமாக உருகாநின்றேன்.
இனி,Ini - இந்நிலைமையில்
செஞ்சு இடர்,Senju idar - (எனது) மனத்துயரை
தீர்ப்பார் ஆர்,Theerpaar aar - போக்குவாரா?