திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3159 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3159திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்தும் அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே இந்த லோகம் உறங்குவதே -என்கிறாள்.) 10
நின்று ருகுகின்றேனே போல நெடு வானம் சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய் அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10
பதவுரை Show / Hide
நின்று உருகுகின்றேன் போல,Nindru uruguginraen pola - நிரந்தரமாக உருகிக் கிடக்கிற என்னைப்போல
நெடுவானம்,Netuvaanam - பரந்த ஆகாசமானது
உருகி சென்று,Urugi sendru - உருகிப்போய் (அதனால்)
நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிய பனித்துளியாய்
செல்கின்ற,Selginra - நடந்து வருகின்ற
கல்குல் வாய்,Kalgul vaay - இராப்பொழுதிலே
அன்று ஒருகால்,Andru orukaal - முன்பொரு காலத்திலே
வையம்,Vaiyam - உலகத்தை
அளந்த,Alandhu - அளந்து ஆக்கிரமித்துக் கொண்ட
பிரான்,Piran - எம்பிரான்
வாரான் என்று,Vaaraan endru - வரமாட்டானென்றாகிலும்
ஒன்று,Ondru - ஒரு வார்த்தையை
ஒருநாள் சொல்லாது,Orunaal sollaadhu - ஒரு தரமேனும் சொல்லாமல்
உலகு,Ulaku - லோகமானது
உறங்கும் ஓ,UrangumO - உறங்குகின்றதே! ஐயோ!