Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3160 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3160திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இப்பாசுரம் கேட்டார் இவர் தசையை அனுசந்தித்தார் பிழையார் என்கிறார் -பரமபத சித்தி சொல்லிற்று -முடிந்தால் புகுமிடம் அதுவாகையாலே சொன்னது அத்தனை.) 11
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11
உறங்குபவன்போல்,Urangubavan pol - நித்திரை செய்பவன்போல்
யோகு செய்து,Yogu seidhu - ரக்ஷனோபாய சிந்தை பண்ணிக் கொண்டிருக்கிற
பெருமானை,Perumanaai - எம்பெருமான் விஷயமாக
சிறந்த தொழில் சூழ் குருகூர் சடகோபன்,Sirandha thozhil sool kurugoor sadagopan - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருநகரிலிருக்குந் தலைவரான ஆழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த
நிதம் கிளர்ந்த,Nitham kilarndha - பண் விஞ்சின
அந்தாதி,Anthaathi - அந்தாதிக் கொடையான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களும்
இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால்
இறந்துபோய்,Iranthupoy - (அவரவர்கள்) சரீர வியோகம் பெற்றபின்பு
வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தில்
சேரா ஆறு,Seraa aaru - புகாதொழிவது
எங்களை,Engalai - எவ்வண்ணம்? (புகவே புகுவர்களென்கை.)