Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3171 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3171திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்களுக்கு பகவச் சேஷத்வம் ஆகிற ஸ்வரூப லாபம் பலமாக அருளிச் செய்கிறார்.) 11
அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11
அறிவு துரிய பிரானை,Arivu thuriya piranai - ஒருவர்க்குமறிய வொண்ணாக ஸ்வாமியாயும்
ஆழி அம் கை யணையே,Aazhi am kai yanaiye - திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனாயுமிருக்கிற எம்பெருமானையே
அலற்றி,Alattri - வாய்வெருவி
ஈறிய,Eeriya - பரிமளம் மிக்க
நல் மலர் நாடி,Nal malar naadi - நல்ல பூக்களை நாடுபவரான
நன் குருகூர் சடகோபன் சொன்ன-;,Nan kurukoor Sadagopan sonna-; - நன் குருகூர் சடகோபன் சொன்ன-;
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள்
திருக் குறுங்குடி அதன் மேல்,Thiru kudungudi adhan mel - திருக்குறுங்குடி விஷயமாகப்பேசினதாய்
குறி கொள்,Kuri kol - எம்பெருமானுடைய திவ்யாவயவ திவ்யாயுத திவ்யாபரணலாஞ்சனம்களை யுடையதான
இவைபத்தும்,Ivaipaththum - இத்திருவாய்மொழியை
அறிய,Ariya - பொருளும் தெரியும்படி
கற்று,Katru - ஓதி
வல்லார்,Vallar - தேறினவர்கள்
ஆழ் கடல்,Azh kadal - ஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்நிலத்துள்
வைட்டணவர்,Vaittanavar - சிறந்த ஸ்ரீஐவஷ்ணவர்களாகக் கொண்டாடப்படுவர்கள்.