| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3183 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி - எனக்கு இவை ஒன்றும் இல்லையே ஆகிலும் நிரதிசய போக்ய பூதனாய் இருந்த உன்னை விட்டு ஒரு படியாலும் நான் தரிக்க மாட்டாமையாலும் அடியேனை விஷயீ கரிக்கைக்காக நீ ஸ்ரீ வர மங்கல நகரிலே வந்து புகுந்து அருளுகையாலும் – உனக்கு அடிமையான இவ்வாத்மாவை நீ போகிடில் இழவு உன்னதாகையாலும் அடியேனைப் பொகட்டு அருள ஒண்ணாது – ஆதலால் அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்.) 1 | நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே! சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர் வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே –5-7-1 | சேறு,Seru - சேற்று நிலங்களிலே செந்நெலூடு,Senneloodu - செந்நெற்பயிர்களிடையே தாமரை மலர்,Thaamarai malar - தாமரைகள் மலரப்பெற்ற சிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - கிரிவரமங்கையென்னும் வானமாமலைப்பதியிலே வீற்றிருந்த எந்தாய்,Veetrirundha endhaay - இருந்தருளும் எம்பெருமானே! அரவின் அணை அம்மானே,Aravin anai ammaaney - சேஷசமயனனான தலைவனே! நோற்ற,Notra - நானாக அனுட்டித்த நோன்பு இலேன்,Nonbu ilean - கருமயோக முடையேனல்லேன்; நுண் அறிவு இலேன்,Nun arivu ilean - நுட்பமான ஞானயோகமும் உடையேனல்லேன்; ஆகினும்,Aakinum - இங்ஙனே நைம்முத வற்றவனேயானாலும் இனி,Ini - இது முதலாக உன்னைவிட்டு,Unnaivittu - உன்னை யொழிய ஒன்றும்,Ondrum - சிறிதும் ஆற்ற நிற்கின்றிலேன்,Aatra nirkindrilean - தரித்திருக்க மாட்டுகின்றிலேன்; உனக்கு,Unakku - ஸர்வரஷகனென்று பேர்பெற்றிருக்கிற உனக்கு அங்கே,Angae - அந்த வானமாமலைபதிதன்னிலே மிகை அல்லேன்,Migai allean - (ரக்ஷ்யவர்க்கத்தில்) வெளிப்பட்டவனல்லேன் (என்னை ரக்ஷித்தே தீரவேணுமென்றபடி. |