Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3184 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3184திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவடிகளை நான் பெறும் இடத்தில் பிரதிபந்தகம் உண்டு எனில் அத்தையும் நீயே போக்கி உன் கிருபையால் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் .) 2
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2
இலங்கை,Ilangai - லங்காபுரியை
செத்த,Seththa - தொலைத்த
அம்மானே,Ammaaney - ஸ்வாமியே!
திங்கள் சேர்,Thingal ser - சந்திரனையும் சேர்ந்திருக்கிற
மணிமாடம்,Manimaadam - மணி மயமான மாடங்களையுடைத்தாய்
நீடு,Needu - விசாலமான திருவீதிகளையுடைந்தாயிருக்கிற
கிரீவரமங்கலம் நகர் உறை,Sreevaramangalam nagar urai - கிரீவரமங்கையிலே நித்யவாஸம் செய்தருளுகிற
சங்கு சக்கரத்தாய்,Sangu sakkaraththaay - சங்கு சக்கரபாணியான ஸர்வேச்வரனே
நான்,Naan - அடியேன்
அங்குற்றேன் அல்லேன் ,Ankutren allean - நித்யஸேவை பண்ணுகிற நித்யஸூரிகளிலே சேர்ந்தவனல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்,Ingurtren allean - உன்னைக் கனவிலுமறியாத ஸம்ஸாரிகள் படியுமுடையேனல்லேன்
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து,Unnai kaanum avaavil veezhndhu - உன்னைக் காணவேணுமென்கிற ஆசையில் படிந்தவானி
எங்குற்றேனும் அல்லேன்,Enguttrenum allean - ஒருவர் படியிலும் சேராதவனாயிரா நின்றேன்;
தமியேனுனக்கு,Thamiyean unakku - இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே
அருளாய்,Arulaay - அருள்புரியவேணும்.