| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3184 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவடிகளை நான் பெறும் இடத்தில் பிரதிபந்தகம் உண்டு எனில் அத்தையும் நீயே போக்கி உன் கிருபையால் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் .) 2 | அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே! திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2 | இலங்கை,Ilangai - லங்காபுரியை செத்த,Seththa - தொலைத்த அம்மானே,Ammaaney - ஸ்வாமியே! திங்கள் சேர்,Thingal ser - சந்திரனையும் சேர்ந்திருக்கிற மணிமாடம்,Manimaadam - மணி மயமான மாடங்களையுடைத்தாய் நீடு,Needu - விசாலமான திருவீதிகளையுடைந்தாயிருக்கிற கிரீவரமங்கலம் நகர் உறை,Sreevaramangalam nagar urai - கிரீவரமங்கையிலே நித்யவாஸம் செய்தருளுகிற சங்கு சக்கரத்தாய்,Sangu sakkaraththaay - சங்கு சக்கரபாணியான ஸர்வேச்வரனே நான்,Naan - அடியேன் அங்குற்றேன் அல்லேன் ,Ankutren allean - நித்யஸேவை பண்ணுகிற நித்யஸூரிகளிலே சேர்ந்தவனல்லேன். இங்குற்றேன் அல்லேன்,Ingurtren allean - உன்னைக் கனவிலுமறியாத ஸம்ஸாரிகள் படியுமுடையேனல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து,Unnai kaanum avaavil veezhndhu - உன்னைக் காணவேணுமென்கிற ஆசையில் படிந்தவானி எங்குற்றேனும் அல்லேன்,Enguttrenum allean - ஒருவர் படியிலும் சேராதவனாயிரா நின்றேன்; தமியேனுனக்கு,Thamiyean unakku - இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே அருளாய்,Arulaay - அருள்புரியவேணும். |