| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3186 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார்.) 4 | மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே! தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4 | மாறு சேர் படை,Maaru ser padai - விரோதிகளாய்க்கொண்டு சேர்ந்த வேளையையுடைய நூற்றுவர்,Nuurruvar - துரியோதநாதிகள் நூறு பேர்களும் மல்க,Malka - தொலையும்படி அன்று,Andru - அக்காலத்தில் ஓர் ஐவர்க்கு ஆம்,Or aivarkku aam - பஞ்சபாண்டவர்களுக்குத் துணைவனாயிருந்து கொண்டு மாயம் போர் பண்ணி,Maayam por panni - ஆச்சரியமான யுத்தத்தை நடத்தி நீறு செய்த எந்தாய்,Neeru seydha endhaay - நீறுபடுத்தின ஸ்வாமியே! நீலம் கீண்ட அம்மானே,Neelam keenda ammaaney - பூமியை ப்ரளயாபத்தில் நின்றும் இடர்ந்தெடுத்த பெருமானே! தேறு ஞானத்தர்,Theru gnaanaththar - தெளிந்த ஞானத்தையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய வேதம் வேள்வி அறா,Vedham velvi araa - வைதிகஸமாராதனம் இடைவிடாமல் நடக்குமிடமான கிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமாமலைப் பதியிலே ஏறி,Eri - குடியேறி வீற்றிருந்தாய்,Veetrirundhaay - பெருமை தோற்ற எழுந்தருளியிருக்குமவனே உன்னை,Unnai - உன்னை எங்கு எய்த,Engu eydha - எங்கேவந்து கிட்டுவதாக கூவுவன்,Koovuvan - நான் கூப்பிடுவேன்? (உன்னை நான் நிர்பந்திருப்பதென்றொரு! பொருளுண்டோ? என்றவாறு.) |