Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3188 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3188திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (நான் ஆசைப்பட்டபடியே அடிமை செய்யலாம்படி வந்தருளவேணுமென்கிறார்.) 6
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6
ஏனம் ஆய்,Yenam aay - மஹாவராஹரூபியாய்
நீலம் கீண்ட,Neelam keenda - பூமியைக்குத்தியெடுத்து வந்து ஸ்வஸ்தானத்திலே சேர்த்த
என் அப்பனே,En appaney - எம்பெருமானே!
கண்ணா,Kanna - கண்ணபிரானே!
என்றும்,Endrum - எந்நாளும்
என்னை ஆள் உடை,Ennai aal udai - என்னை அடிமை கொள்ளுகிற
நானம் நாயகனே,Naanam naayakaney - நித்யஸூரிநாதனே!
மணி மாணிக்கம் சுடரே,Mani maanikam sudarey - மணி மாணிக்கம் போன்ற தேஜஸ்ஸையுடையவனே!
தேவை மா பொழில்,Thevai maa pozhil - தேனையுடைய மாந்தோப்பு சூழ்ந்த
தண்,Than - குளிர்ந்த
கிரீவரமங்கலத்தவர்,Sreevaramangalaththavar - கிரீவரமங்கயிலுள்ளவர்கள்
கை தொழ,Kai thoza - வணங்கும்படியாக
உறை,Urai - அங்கு நித்யவாஸம் பண்ணுகிற
வானமாமலையே,Vaanamaamalaiye - வானமாமலைப்பெருமானே!
அடியேன் தொழ,Adiyean thoza - அடியேன் தொழும்படியாக
வந்தருள்,Vandharul - இங்கே யெழுந்தருளாய்